Friday, May 9, 2008

About Tamil Thatha

தமிழ் தாத்தா பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும் உனக்கு ஏதாவது தெரியுமா என்று நண்பன் ஒருவனிடம் கேட்டேன். இந்தியன் தாத்தா பற்றிக் கேளு பூட்டு பூட்டு வைக்கிறேன். அது யாருடா தமிழ் தாத்தா என்றான். அடப்பாவி என்று வலை உலக தகவல் மையமான விக்கிப்பிடியா வில் சேகரித்த தகவல் இதோ,


உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் சுருக்கமாக உ.வே.சா சிறப்பாக தமிழ் தாத்தா) ஒரு தமிழறிஞர். பலராலும் மறக்கப்பட்டு அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அவற்றை அச்சிட்டு பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குச் சேவை புரிந்தவர்களுள் உ. வே. சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவராவார். இவரது அச்சுப்பதிப்பிற்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையும், செழுமையும் எல்லோராலும் அறியும்படி வெளிக்கொணரப்பட்டது. உ.வே.சா அவர்கள் 90 ற்கும் அதிகமான புத்தகங்களை அச்சுப்பதிப்பதித்தது மாத்திரமன்றி 3000 ற்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப்பிரதிகள் ஆகியவற்றை சேகரித்தும் இருந்தார்.

2 comments:

by kids kor kids said...

first I didnt know about tamil thatha, but know I know about him.

by Rupesh

by kids kor kids said...

Thanks.